1 நாளாகமம் - 8 வது அதிகாரம்

வசனங்கள் 1 முதல் 40 வரை

1 நாளாகமம் 8:1

பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,

1 நாளாகமம் 8:2

நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.

1 நாளாகமம் 8:3

பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.

1 நாளாகமம் 8:4

அபிசுவா, நாமான், அகோவா,

1 நாளாகமம் 8:5

கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.

1 நாளாகமம் 8:6

கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.

1 நாளாகமம் 8:7

கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போன பின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.

1 நாளாகமம் 8:8

அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,

1 நாளாகமம் 8:9

தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,

1 நாளாகமம் 8:10

எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.

1 நாளாகமம் 8:11

ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.

1 நாளாகமம் 8:12

எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.

1 நாளாகமம் 8:13

பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்.

1 நாளாகமம் 8:14

அகியோ, சாஷாக், எரேமோத்,

1 நாளாகமம் 8:15

செபதியா, ஆராத், ஆதேர்.

1 நாளாகமம் 8:16

மிகாயேஸ், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.

1 நாளாகமம் 8:17

செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,

1 நாளாகமம் 8:18

இஸமெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.

1 நாளாகமம் 8:19

யாக்கிம், சிக்ரி, சப்தி,

1 நாளாகமம் 8:20

எலியேனாய், சில்தாய், எலியேல்,

1 நாளாகமம் 8:21

அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.

1 நாளாகமம் 8:22

இஸ்பான், ஏபேர், ஏலியேல்,

1 நாளாகமம் 8:23

அப்தோன், சிக்ரி, ஆனான்,

1 நாளாகமம் 8:24

அனனியா, ஏலாம், அந்தோதியா,

1 நாளாகமம் 8:25

இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் குமாரர்.

1 நாளாகமம் 8:26

சம்சேராய், செகரியா, அத்தாலியா,

1 நாளாகமம் 8:27

யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர்.

1 நாளாகமம் 8:28

இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.

1 நாளாகமம் 8:29

கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின் பேர் மாக்காள்.

1 நாளாகமம் 8:30

அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்.

1 நாளாகமம் 8:31

கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.

1 நாளாகமம் 8:32

மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.

1 நாளாகமம் 8:33

நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

1 நாளாகமம் 8:34

யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.

1 நாளாகமம் 8:35

மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.

1 நாளாகமம் 8:36

ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.

1 நாளாகமம் 8:37

மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.

1 நாளாகமம் 8:38

ஆத்சேலுக்கு ஆறு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.

1 நாளாகமம் 8:39

அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே.

1 நாளாகமம் 8:40

ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.